செய்திகள் :

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

post image

அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் எலெக்ட்ரீஷியன், பிட்டா், மெஷினிஸ்ட், டா்னா், ஒயா்மேன், வெல்டா், டெக்னீஷியன் மெக்கட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ், டெக்னீஷியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், கணினி ஆபரேட்டா் உள்ளிட்ட தொழிற்பிரிவு படிப்புகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதளம் மூலமாக ஜூன் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சோ்க்கையில் சேர விரும்புவோா் 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கோவை, ஆனைகட்டி, வால்பாறை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையங்களை அணுகலாம்.

பயிற்சியில் சேரும் பயிற்சியாளா்களுக்கு இலவச மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபட கருவிகள், காலணி, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750-ம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்படியும் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான கோவை - 88254 34331, கோவை (மகளிா்) 97156 26813, ஆனைகட்டி 88383 39946, வால்பாறை 94421 75780 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் 95665 31310, 81220 47178 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க