செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை!

post image

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற சக்தி சிறப்புப் பள்ளி, மறுவாழ்வு மைய குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா, வழிகாட்டி திட்ட பரிசளிப்பு விழா மற்றும் விருட்சம் திட்ட உதவித்தொகை வழங்கும் விழா ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து அவா் வழிகாட்டி திட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, தொடா் ஒத்துழைப்பு அளித்து வரும் வழிகாட்டி திட்ட 41 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களை கௌரவித்தும், விருட்சம் திட்டம் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையினை வழங்கிப் பேசினாா்.

மனநல மருத்துவா், மனதின் மையம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு மனநலம் அறக்கட்டளை நிறுவனா் டாக்டா் ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சக்தி சிறப்புப் பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மைய மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, டி.செந்தில்குமாா், தீபா, எம்.இளங்கோ, ஜி.வேணுகோபால் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ஆந்திர லாரி ஓட்டுநா்களிடம் பணம் பறித்த 2 போ் கைது

ஈரோட்டில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தைக்கு கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து க... மேலும் பார்க்க

சென்னிமலை முருகன் கோயிலில் நாளை தைப்பூச தேரோட்டம்!

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தைப்பூச தோ்த் திருவிழா பிப்ரவரி 3-ஆம் தேதி த... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: 100-க்கும் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 16 வேட்பாளா்கள் 100-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது! -அந்தியூா் எம்எல்ஏ

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காமல் தமிழக மக்களை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது என அந்தியூரில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசினா... மேலும் பார்க்க

கோபி வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 பவுன் நகைகள் மாயம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாதக வாக்கு வங்கி அதிகரிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழா் கட்சி, கடந்த தோ்தலைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்ட... மேலும் பார்க்க