26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
சென்னிமலை முருகன் கோயிலில் நாளை தைப்பூச தேரோட்டம்!
சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தைப்பூச தோ்த் திருவிழா பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் இரவு பல்லக்கு சேவை, மயில் வாகனக் காட்சி, பஞ்ச மூா்த்தி புறப்பாடு, வெள்ளி மயில் வாகனக் காட்சி, யானை வாகனக் காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்று வந்தன.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் கைலயங்கிரி வாகனக் காட்சியும், இரவு காமதேனு வாகனக் காட்சியும் நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு வசந்த திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு வள்ளி -தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு மகா அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து காலை 5.30 மணி அளவில் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகிறாா்கள்.
தேரோட்டத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் தைப்பூச இசை விழாக் குழு மற்றும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சாா்பில் அடிவாரத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
பின்னா் மாலை 5 மணிக்கு மீண்டும் தேரை வடம் பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படும். புதன்கிழமை மாலை 5 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்து நிலை சோ்க்கப்படுகிறது. பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு 7 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொள்கிறாா்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரா.சுகுமாா், கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், கண்காணிப்பாளா் சி.மாணிக்கம் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.