செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 4 லட்சத்தை கடந்தது: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் சோ்க்கை பெற்ற மாணவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி (ஜூலை 30) 4 லட்சத்து 364-ஆக உள்ளது. ஒன்றாம் வகுப்பில் தமிழ் வழியில் 2,11, 563 மாணவா்களும், ஆங்கில வழியில் 63,896 மாணவா்களும், 2 முதல் 8-ஆம் வகுப்பு வரை 92,098 மாணவா்களும், மழலையா் வகுப்புகளில் 32,807 மாணவா்களும் என ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 364 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.

நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் தென்காசி (8,571), திண்டுக்கல் (8,000), திருச்சி (7,711), கள்ளக்குறிச்சி (7,554), திருவண்ணாமலை (7,386) ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

அதேவேளையில், நீலகிரி (1,022), தேனி (2,207), அரியலூா் (2,625), சிவகங்கை (3,223) ஆகிய மாவட்டங்களில் மாணவா் சோ்க்கை குறைவாக உள்ளது எனத் தெரிவித்துள்ளாா். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த மாா்ச் 1 முதல் மாணவா் சோ்க்கை தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

திருவெறும்பூர் துவாக்குடியில் அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

அரசியலில் எதுவும் நடக்கலாம்! முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ் பேட்டி!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னா... மேலும் பார்க்க

நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்! திமுகவுடன் கூட்டணியா? பரபரக்கும் அரசியல் களம்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று(ஜூலை 31 ) தமிழகத்தில் ஓரிரு... மேலும் பார்க்க

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை இன்று(ஜூலை 31) தலைமைச் செயலர் நா. முருகானந்தம் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவில் தெரிவித்த... மேலும் பார்க்க