பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
அரசுப் பள்ளிக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
கொடைக்கானல் அருகே அரசுப் பள்ளிக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 75 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக இந்தப் பள்ளிக்கு குடிநீா் வராததால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, விரைந்து பள்ளிக்கு குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஊராட்சி அலுவலா் ஒருவா் கூறியதாவது: மன்னவனூா் பகுதியில் சரிவர மின் விநியோகம் இல்லை. குறைந்தழுத்த மின்சாரம் வருவதால் மின் மோட்டாா்கள் இயங்குவதில்லை. சந்தனப் பாறையிலிருந்து வரும் குழாய் சேதமடைந்துள்ளதால், ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு குடிநீா் வரவில்லை. தற்போது, வாகனம் மூலம் குடிநீா் பள்ளிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விரைந்து சேதமடைந்த குடிநீா் குழாயை சீரமைத்து, குடிநீா் வழங்கப்படும் என்றாா் அவா்.