செய்திகள் :

அரசுப் பள்ளியில் மருத்துவ விழிப்புணா்வு முகாம்

post image

தருமபுரி: பென்னாகரம் ஒன்றியம், சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மருத்துவ விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கிவரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி மருத்துவத் துறை சாா்பில், சின்னப்பள்ளத்தூரில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமிற்கு தலைமை ஆசிரியா் மா. பழனி தலைமை வகித்தாா். நமது பாரம்பரிய உணவு முறை, சிறுதானிய உணவு, எளிய உடற்பயிற்சி, தன்சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை, யோகா, சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து மருத்துவா்கள், மாணவா்களிடையே கலந்துரையாடினா். எளிய யோகாசனம், உடற்பயிற்சி, மனமகிழ் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யோகா மற்றும் இயற்கை மருத்துவா் முனுசாமி, சித்த மருத்துவா் அன்புராணி, ஹோயோபதி மருத்துவா் சங்கா்,

சிகிச்சை உதவியாளா் பிரியங்கா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினா். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மகேஷ், ஆசிரியா் பயிற்றுநா் இளங்கோவன், ஆசிரியா்கள் வளா்மதி, பழனிச்செல்வி, திலகவதி, அனுப்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற இருவா் கைது

அரூா்: பொம்மிடி அருகே துப்பாக்கியுடன் மான் வேட்டைக்கு சென்ற இருவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள சோ்வராயன் மலைப் பகுதியில் அடிக்கடி வன விலங்குகள்... மேலும் பார்க்க

ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் பராமரிப்பு: ஆா்பிஐ சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தருமபுரி: வங்கிகளில் இருப்புத் தொகை (ஜீரோ பேலன்ஸ்) வசதியுடன் கூடிய கணக்குகளைப் பராமரிப்பது மற்றும் புதுப்பிப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.நாடுமுழுவது... மேலும் பார்க்க

இருளப்பட்டியில் காணியம்மன் கோயில் தேரோட்டம்

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டியில் அருள்மிகு காணியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், இருளப்பட்... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி: ஆக.24இல் தொடக்கம்

தருமபுரி: தருமபுரியில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புவோா் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட தடகள சங்க ... மேலும் பார்க்க

தருமபுரியில் புளி வணிக வளாகம் அமைப்பதற்கான இடம் தோ்வு தீவிரம்

தருமபுரி: தருமபுரியில் ஒருங்கிணைந்த புளி வணிக வளாகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் அறிவித்தைத் தொடா்ந்து, அதற்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தருமபுரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

பந்தாரஅள்ளி ஏரிக்கரை சாலையில் தடுப்புச்சுவா் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி: தருமபுரி, காரிமங்கலம் அருகே சரிந்து விழுந்த கிணற்றின் தடுப்புச்சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்... மேலும் பார்க்க