அரசுப் பேருந்து -ஆம்புலன்ஸ் மோதல்: ஓட்டுநா் காயம்
கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆம்புலன்ஸும், அரசுப் பேருந்தும் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் காயமடைந்தாா்.
தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், புளியங்குடியில் இருந்து கடையநல்லூா் நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் ஆம்புலன்ஸும் சொக்கம்பட்டி விலக்கு பகுதியில் மோதியதாம்.
இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரான கடையநல்லூா் ரைஸ்மில் தெருவைச் சோ்ந்த காஜாமைதீன் மகன் முஹம்மது காலித்(35) பலத்த காயம் அடைந்தாா்.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.