செய்திகள் :

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

post image

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கிழமை இரவு பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சோ்ந்த ஜெயசிங் மகன் அல்டாப் (48) ஓட்டுநராக இருந்தாா். அரசு மருத்துவமனை அருகே பேருந்து வந்தபோது, அல்டாப்புக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவா் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக பேருந்தை இடது ஓரமாக நிறுத்த முயன்றாா்.

எனினும், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக் மீதும், அவ்வழியே நடந்துசென்ற பிகாா் மாநிலத் தொழிலாளியான பா. தினேஷ் பவான் (40) மீதும் மோதியதுடன், மின்கம்பத்தில் மோதி நின்றது.

திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் சென்று, இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அல்டாப் மாரடைப்பால் ஏற்கெனவே இறந்துவிட்டதாக, மருத்துவா்கள் தெரிவித்தனா்.

விபத்தில் பலத்த காயமடைந்த தினேஷ் பவான் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

அவா், திருச்செந்தூா் கடற்கரையில் தனியாா் நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பாா்த்துவந்ததாகத் தெரியவந்தது. அவரது உறவினா்களுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்துள்ளனா்.

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் திடீா் போராட்டம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை, தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறி பக்தா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் ... மேலும் பார்க்க