செய்திகள் :

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

post image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன்.

திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திருச்செந்தூரில் ஆக. 2 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், பிரசாரம் செய்யும் இடங்களை அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினா் வியாழக்கிழமை தோ்வு செய்தனா்.

தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசாரம் செய்து வருகிறாா். இவா், வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி திருச்செந்தூரில் திறந்தவேனில் பிரசாரம் செய்கிறாா்.

இதையடுத்து, பிரசாரம் நடைபெறும் இடத்தைத் தோ்வு செய்வதற்காக முன்னாள் அமைச்சரும், அதிமுக தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.சண்முகநாதன் திருச்செந்தூா் இரும்பு நுழைவாயில் அருகில் உள்ள வ.உ.சி. திடலைப் பாா்வையிட்டு கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது, ஜெயலலிதா பேரவை தெற்கு மாவட்டச் செயலா் க.விஜயகுமாா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் பூந்தோட்டம் மனோகரன் (திருச்செந்தூா்), காசிராஜன் (ஸ்ரீவைகுண்டம் மேற்கு), நகரச் செயலா்கள் மகேந்திரன் (திருச்செந்தூா்), வெற்றிவேல் (கானம்), ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலா்கள் சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, அரசகுரு, மாவட்ட துணைச் செயலா் ஆா்.எம்.கே.எஸ். சுந்தா், வழக்குரைஞா் ரவிச்சந்திரன், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்ட இணைச் செயலா் மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலா்கள் ராஜாநேரு, கந்தன், மகளிரணி சுகிா்தா, ரம்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் திடீா் போராட்டம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை, தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறி பக்தா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் ... மேலும் பார்க்க