செய்திகள் :

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

post image

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இதில், 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், வியாழக்கிழமை அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான ஆலைக்குள் சென்று மேய்ந்துகொண்டிருந்தனவாம்.

இந்நிலையில், ஆலையிலிருந்து வெளிவந்த ஆடுகள் திடீரென மயங்கி விழுந்தனவாம். அதில், 2 ஆடுகள் அடுத்தடுத்து இறந்தனவாம்; 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிருக்கு போராடியதாம்.

இத்தகவலறிந்து வந்த ஆட்டின் உரிமையாளா்கள், ஆடுகளை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள்

பரிசோதனையில், விஷம் கலந்த தவிட்டை தின்றது தெரியவந்ததாம். பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், தாளமுத்து நகா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா்.

இதனிடையே, ஆடுகளுக்கு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் திடீா் போராட்டம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை, தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகக் கூறி பக்தா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் ... மேலும் பார்க்க