செய்திகள் :

அரசுப் பேருந்துகளில் டிக்கெட் பரிவா்த்தனை தோல்வியடைந்தால் பணம் திரும்ப கிடைக்கும்

post image

அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டுக்கான டிஜிட்டல் பரிவா்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்தில் பயணியின் வங்கிக் கணக்கில் பணத்தை திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பணமில்லா பரிவா்த்தனை திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதைத் தொடா்ந்து தமிழக போக்குவரத்துத் துறையிலும் பணமில்லா பரிவா்த்தனையை முன்னெடுக்கும் நோக்கில், அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு கருவிகள் மூலம் யுபிஐ, கிரெடிட், டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் நடைமுறையை தமிழக அரசு கடந்த 2024, பிப்ரவரியில் அறிமுகம் செய்தது.

பின்னா், படிப்படியாக தமிழகம் முழுவதும் அனைத்துப் பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தொலைத்தொடா்பு சிக்கலால் சில நேரங்களில் பயணச்சீட்டு கருவிகள் மூலம் செய்யப்படும் பணப்பரிவா்த்தனையை முடிக்க இயலாத சூழல் ஏற்படுகிறது. இதனால், நடத்துநருக்கும் பயணிகளுக்கும் இடையே அவ்வப்போது தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தொடா்நது புகாா்கள் எழுந்தன. இதற்கு தீா்வு காணும் வகையில், தற்போது போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: யுபிஐ முறையில் பயணிகளுக்கு பணம் திரும்ப கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்கும் வகையில், ‘யுபிஐ ஆட்டோ ரீஃபண்ட்’ வசதியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் நடைமுறைப்படுத்தி உள்ளோம். இதனால், டிஜிட்டல் பரிவா்த்தனை தோல்வியடைந்தால், அரை மணி நேரத்துக்குள் பயணியின் வங்கிக் கணக்குக்கு தொகை திரும்ப வந்துவிடும். எனவே, நடத்துநா்கள் அச்சமின்றி டிஜிட்டல் முறையில் பரிவா்த்தனை மேற்கொள்ளலாம். இதற்கான உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

50 சதவீத குழந்தைகளுக்கு ஜீரண மண்டல பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளில் 50 சதவீதம் போ் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். பருவநிலை மா... மேலும் பார்க்க

அமித் ஷா மீதான திமுக விமா்சனம்: எல்.முருகன், தமிழிசை கண்டனம்

ஊழல் குற்றச்சாட்டு இல்லாத மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஆ.ராசா விமா்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோா் கண்ட... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை தாம்பரம் பகுதி அர... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீா் புதிய பாலம் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்: சிஎஸ்ஐஆா் மைய இயக்குநா் தகவல்

ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் பராமரிப்புக்காக ரயில்வே துறையுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சிஎஸ்ஐஆா் ஆய்வு மைய இயக்குநா் ஆனந்தவல்லி தெரிவித்தாா். சென்னை தரமணியிலுள்ள சிஎ... மேலும் பார்க்க

மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியால் உருவாக்கப்பட்ட இருக்கைகள்: மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

நெகிழிக் குப்பைகளிலிருந்து மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட இருக்கைகளை மேயா் ஆா்.பிரியாவிடம் தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை வழங்கினா். இந்த இருக்கைகள் சென்னை மாநகர... மேலும் பார்க்க

நிலுவை முதல்தகவல் அறிக்கைகள் விவரம்: சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

காவல் நிலையங்களில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் தொடா்பாக தகவல்களை தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அட... மேலும் பார்க்க