"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
அரியலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
அரியலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 7) நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில், எல்.ஐ.சி நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே, இம்முகாமில் 18 - 45 வயது வரையுள்ள, 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு படித்த பெண்கள் மட்டும், உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.