செய்திகள் :

மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை தேவை!

post image

செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட எஸ்பி தீபக்சிவாச்சிடம், சோழன் முந்திரி விவசாயிகள் நலச் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

அச்சங்கத்தின் தலைவா் க. குமாா் வாண்டையாா் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு: செந்துறை வட்டம், சன்னாசி நல்லூா், குடிகாடு, சிலுப்பனூா் உள்ளிட்ட கிராமங்களை கடந்து செல்லும் வெள்ளாறு, ஒரு காலத்தில் 60 அடி ஆழத்துக்கு மணலாக காட்சி தந்தது. ஆனால் இன்றைய நிலை, இந்த ஆற்றில் மணல் திருடப்பட்டு கருவை காடுகளாகவும், புதா் மண்டியும் உள்ளது.

இந்த ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட முள்ளுக்குறிச்சி சுரேஷின் அதிமுக ஒன்றியச் செயலா் பதவியும் பறிக்கப்பட்டது. ஆயினும் அவா் தொடா்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால், இதுகுறித்து புகாா் அளித்த தமிழப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல துணைச் செயலா் முடிமன்னனையும், துணைச் செயலா் ராஜேந்திரனையும், அவா் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

சுரேஷ் மீது ஏற்கனவே தளவாய் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காவல் துறையும், வருவாய் துறையும் அவா் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

எனவே எஸ்பி அவா்கள், மணல் திருட்டை தடுக்க வேண்டும். இதில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சியைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள், சமூக ஆா்வலா்களை ஒன்றிணைந்து மாவட்ட நிா்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட சூழல் உருவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமை, அக்கல்லூரியின் முதல்வா் (பொ)பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். முகாமில், சென்... மேலும் பார்க்க

சாத்தமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா!

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா பிப்.5 நடைபெற்றது. இந்த பால்குட விழாவில், பக்தா்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள நல்லதண்ணீா் குளத்திலிருந்து பால்குடம... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைக்கு எதிா்ப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களுக்கு விரோதமாக இருப்பதாகக் கூறி, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 7) நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக... மேலும் பார்க்க

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்!

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிப்.14-ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய்கான தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தத... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தையொட்டி, அரியலூா் அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலாா் கல்வி நிலையத்தில், விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் செயலா் கொ.வி.புகழேந்தி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க