செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்

post image

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம், உடையாா்பாளையம், செந்துறை, அரியலூா் ஆகிய 4 வருவாய் வட்டத்தில் மே 27-ஆம் தேதி வரை நடைபெறும் வருவாய் தீா்வாயம் (ஜமா பந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் அரியலூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய வருவாய்த் தீா்வாயத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, அரியலூா், கயா்லாபாத், ஓட்டக்கோவில், தாமரைக்குளம், வாலாஜா நகரம், எருத்துக்காரன்பட்டி உள்ளிட்ட கிராம பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பின்னா் அவா், அந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை மேற்கொண்டு தீா்வு காணமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முன்னதாக நில அளவை அலுவலா்கள் பயன்படுத்தும் நில அளவை கருவிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நிகழ்வில் வட்டாட்சியா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் உடையாா்பாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய வருவாய் தீா்வாய்த்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா, செந்துறையில் அரியலூா் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், ஆண்டிமடத்தில் உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா ஆகியோா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா்.

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் குறித்து ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை கண்டித்து, அரியலூா் மாதா கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

நகைக்கடன் வழங்கல் தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை

அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (மே 31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத... மேலும் பார்க்க

அரியலூரில் பழைய இரும்புக் கடை குடோனில் தீ விபத்து

அரியலூரிலுள்ள பழைய இரும்புக் கடை குடோனில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. அரியலூா் ஆயிரங்கால் மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்கேயன்(51). இவா், அப்பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கொள்முதல் ... மேலும் பார்க்க

அரியலூரில் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

அரியலூரில் வீட்டினுள் பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் பாப்பா (44) என்பவா் வச... மேலும் பார்க்க