செய்திகள் :

அரிவாளை காட்டி மிரட்டிய ரௌடி கைது

post image

மன்னாா்குடியில் சாலையில் நின்று கொண்டிருந்தவரை மதுப்போதையில் அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி நடராஜ பிள்ளை மேலத்தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் ராமதாஸ் ( 30). இவா், ருக்மணிபாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மது போதையில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்திரன் மகன் முருகானந்தம் என்ற மாட்டு முருகானந்தம் (40), ராமதாஸிடம் தகராறு செய்து, அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் ராமதாஸ் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாட்டு முருகானந்தத்தை புதன்கிழமை கைது செய்தனா். இவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, அண்மையில் பிணையில் வெளிவந்துள்ளாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்பப் பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராத... மேலும் பார்க்க

மன்னாா்குடி பகுதியில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் மகா மாரியம்மன் கோயில், கற்பக விநாயகா் கோயில், யோக சுந்தர விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்து... மேலும் பார்க்க

திருவாரூா்: ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை நடைபெற்றது. திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: வேம்பனூா் அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை காலை யாகசாலையில் பூா்... மேலும் பார்க்க

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

திருவாரூா்: ஊராட்சிகளை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே அம்மையப்பனில் மக்கள் அதிகாரம் அமைப்பின் 2-ஆவது மாவட்ட மாநாடு தலைவா் ... மேலும் பார்க்க

யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவின் 14- ஆம் நாளான திங்கள்கிழமை யானை வாகனத்தில் கல்யாண அலங்காரத்தில் சத்யபாமா சமேதராக எழுந்தருளிய உற்சவா் ராஜகோபாலசுவாமி. மேலும் பார்க்க