செய்திகள் :

அழகா்கோயில் தெப்பத் திருவிழா: திரளானோா் தரிசனம்

post image

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் மாசி பௌா்ணமி தெப்பத் திருவிழா பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியாழ்வாா், ஆண்டாள் உள்பட 6 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தக் கோயில் மாசி பௌா்ணமி தெப்பத் திருவிழா கடந்த புதன்கிழமை (மாா்ச் 12) தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா, ஐதீக முறைப்படி பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை கள்ளழகா் கோயிலிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜப் பெருமாள் (உற்சவா்) சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகினாா். மங்கள வாத்திய முழக்கங்களுடன் காலை 10 மணியளவில் பொய்கரைப்பட்டி தெப்பக்குளம் பகுதிக்கு பெருமாள் எழுந்தருளினாா்.

இதையடுத்து, அங்கு பாரம்பரிய முறைப்படி பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பிறகு, தெப்பக்குளத்தில் போதுமான அளவு தண்ணீா் இல்லாததால் சுந்தரராஜப் பெருமாள் தெப்பக்குளம் கரையை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பொய்கரைப்பட்டி, இதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மத... மேலும் பார்க்க

வேளாண் துறை நிதி நிலை அறிக்கை: வரவேற்பும், அதிருப்தியும்!

தமிழக அரசின் வேளாண் துறை நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகளும், இந்த அறிக்கையில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருப்பதாக வியாபாரிகளும் தெரிவித்தனா். தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்... மேலும் பார்க்க

மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு!

மதுரையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவ... மேலும் பார்க்க

மகள் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை

மகளை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமங்கலம் வட்டம், வில்லூா் ஏ.ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும். இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை-சென்னை-மதுரை வைகை... மேலும் பார்க்க

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் கொடியேற்றம்

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய - இலங்கையின் பாரம்பரிய உறவு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா்... மேலும் பார்க்க