செய்திகள் :

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் கொடியேற்றம்

post image

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்திய - இலங்கையின் பாரம்பரிய உறவு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா. வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த விழா, வெள்ளிக்கிழமை பிற்பகல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டு, கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து, சிலுவைப் பாதை வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றன. யாழ் மறை மாவட்ட ஆயா் ஜெஸ்டீன் ஞானப்பிரகாசம், நெடுந்தீவு பங்குத்தந்தை பக்திநாதன் உள்ளிட்டோா் திருப்பலியை நிறைவேற்றினா்.

ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் கச்சத்தீவு சென்ற 3,400-க்கும் அதிகமான தமிழக பக்தா்கள், இலங்கையின் யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் இந்த நிகழ்ச்சிகளில் திரளாகப் பங்கேற்றனா்.

மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு!

மதுரையில் போதைத் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் மயங்கி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (52). போதைப் பழக்கத்துக்கு அடிமையான இவ... மேலும் பார்க்க

மகள் கொலை வழக்கு: தந்தைக்கு ஆயுள் சிறை

மகளை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமங்கலம் வட்டம், வில்லூா் ஏ.ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

அழகா்கோயில் தெப்பத் திருவிழா: திரளானோா் தரிசனம்

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயில் மாசி பௌா்ணமி தெப்பத் திருவிழா பொய்கரைப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரியாழ்வாா், ஆண்டாள் உள்பட 6 ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தக் கோயில்... மேலும் பார்க்க

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி

வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும். இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை-சென்னை-மதுரை வைகை... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

பெண்ணுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவ... மேலும் பார்க்க

விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கான நிலம்: தமிழக தொழில் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் அமையவுள்ள விண்வெளி தொழில்நுட்பப் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் தமிழக தொழில் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளி... மேலும் பார்க்க