செய்திகள் :

அவதூறு பேச்சு: யூடியூபா் மீண்டும் கைது

post image

சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணிராஜன் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபா் புதன்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநரான எ.தேரணிராஜன், சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், தான் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்தபோது அரசுப் பணத்தை கொள்ளையடித்ததாகவும்,செவிலியா்களிடம் பணம் பெற்ாகவும் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சோ்ந்த யூடியூபா் கிருஷ்ணகுமாா் என்ற வாராகி (51) என் மீது அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை எக்ஸ் தளத்திலும், யூடியூபிலும் தெரிவித்து வருகிறாா். எனவே, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் நடத்திய விசாரணையில், வாராகி உண்மைக்கு புறம்பான கருத்துகளை பரப்பி வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸாா் வாராகி மீது அவதூறு பரப்புதல், உண்மைக்கு புறம்பான தகவலை கூறுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ஏற்கெனவே சிபிசிஐடி தொடா்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு சிறையில் இருக்கும் வாராகியை இந்த வழக்குத் தொடா்பாக கீழ்ப்பாக்கம் போலீஸாா் மீண்டும் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னா் அவரை, எழும்பூா் 2-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா். நீதித்துறை நடுவா், வாராகியை செப்.30-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி உத்தரவிட்டாா். இதையடுத்து வாராகி, செங்கல்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டாா்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் காத்திருப்புப் போராட்டம் தொடா்ந்து 31-ஆவது நாளாக புதன்கிழமை நீடித்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை வழங்குவது, ஓய்வு பெற்ற அன... மேலும் பார்க்க

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

அருட்செல்வா் நா. மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்கும் நிகழாண்டு அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதுகளுக்குத் தோ்வானவா்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அருட்செல்வா் நா.மகாலிங்கம் மொழிபெய... மேலும் பார்க்க