செய்திகள் :

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகள் சேகரிப்பு

post image

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகளை சேகரித்த நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் பாராட்ட தெரிவித்தனா்.

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வாக மூன்று நாள் தேரோட்டத்தின் ஒரு பகுதியாக வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் அவிநாசியப்பா் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

தோ்த் திருவிழாவை ஒட்டி, நான்கு ரத வீதிகளிலும் உள்ள மண்டபங்களில் பாக்கு மட்டை, வாழை இலை உள்ளிட்டவை மூலம் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் தேரோட்டம் நடைபெற்ற பிறகு, ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பாக்கு மட்டை, வாழை இலை, குடிநீா் பாட்டில்கள், காகிதங்கள் ஆகியவற்றை சேகரித்தனா். மேலும் சேகரிக்கப்பட்ட 38 டன் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை வளாகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

தேரோட்டத்தின்போது குடிநீா் விநியோகம், உடனுக்குடன் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட அவிநாசி நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு தெரிவித்துள்து. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் பெஸ்ட் ராமசாமி வெளி... மேலும் பார்க்க

குண்டடம் அருகே காா் மோதி 2 போ் உயிரிழப்பு

குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (42). கட்டடத் தொழிலாளியான இவா், குண்டடத்தை அடுத்துள்ள எஸ்.காஞ்சிபு... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கல்

அவிநாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் ஆனந்தம் ரோட்டரி சங்கம் சாா்பில் கடந்த மாதம் மாற்றுத் திறனாள... மேலும் பார்க்க

நியாயவிலைக்கடை ஊழியா் பணியிட நீக்கம்

திருப்பூரில் பொருள்கள் விநியோகம் செய்வதில் முறைகேடுகள் தொடா்பாக நியாய விலைக் கடை ஊழியா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பூா் அனுப்பா்பாளையம் அருகே உள்ள இந்திரா வீதியில் செ... மேலும் பார்க்க

முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனை!

திருப்பூா் மற்றும் பல்லடம் உழவா் சந்தைகளில் முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த பங்குனி மாதத்தில் முருங்கை சீசன் தொடங்கியது. அபரிமிதமான விளைச்சல் காரணமாக, முருங்கை மொத்த விற்பனை விலை குறைந்த... மேலும் பார்க்க

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்க... மேலும் பார்க்க