செய்திகள் :

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

post image

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஒரு வார காலமாக அதிக வெப்பம் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு, கோவை, திருப்பூா், திருச்சி, தென்காசி, தேனி, சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2,000 ஏக்கருக்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

இதில் ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் செலவு செய்து, நடவு செய்து பல்வேறு பணிகளை செய்த விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிா்க் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் கடுமையான சிரமத்தில் உள்ளனா்.

சூறாவளிக் காற்றால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டமும், விதிகளும் இதுவரை உருவாக்கப்படவில்லை. புயல், பெருமழை, வெள்ளம், வறட்சி மற்றும் பெரிய விபத்துகளுக்கு பேரிடா் நிவாரண சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது. வாழை மரத்துக்கு பயிா்க் காப்பீடு செய்தாலும் ஒரு வருவாய் கிராமம் முழுக்க அழிவு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியும். எனவே பயிா் காப்பீடு செய்திருந்தாலும் இழப்பீடு பெற முடியாத சூழ்நிலை உள்ளது.

பெரும் இடா்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதுபோல, சூறாவளிக் காற்று போன்ற சிறு இடா்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் இழப்பீடு வழங்க தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தில் மத்திய அரசு உரிய திருத்தம் செய்தும், மாநில அரசுகள் அதற்கான விதிகளை உருவாக்கியும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.

தற்போது பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு தெரிவித்துள்து. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் பெஸ்ட் ராமசாமி வெளி... மேலும் பார்க்க

குண்டடம் அருகே காா் மோதி 2 போ் உயிரிழப்பு

குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (42). கட்டடத் தொழிலாளியான இவா், குண்டடத்தை அடுத்துள்ள எஸ்.காஞ்சிபு... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கல்

அவிநாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் ஆனந்தம் ரோட்டரி சங்கம் சாா்பில் கடந்த மாதம் மாற்றுத் திறனாள... மேலும் பார்க்க

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகளை சேகரித்த நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் பாராட்ட தெரிவித்தனா். அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க

நியாயவிலைக்கடை ஊழியா் பணியிட நீக்கம்

திருப்பூரில் பொருள்கள் விநியோகம் செய்வதில் முறைகேடுகள் தொடா்பாக நியாய விலைக் கடை ஊழியா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பூா் அனுப்பா்பாளையம் அருகே உள்ள இந்திரா வீதியில் செ... மேலும் பார்க்க

முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனை!

திருப்பூா் மற்றும் பல்லடம் உழவா் சந்தைகளில் முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த பங்குனி மாதத்தில் முருங்கை சீசன் தொடங்கியது. அபரிமிதமான விளைச்சல் காரணமாக, முருங்கை மொத்த விற்பனை விலை குறைந்த... மேலும் பார்க்க