செய்திகள் :

குண்டடம் அருகே காா் மோதி 2 போ் உயிரிழப்பு

post image

குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (42). கட்டடத் தொழிலாளியான இவா், குண்டடத்தை அடுத்துள்ள எஸ்.காஞ்சிபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து (45) என்பவரது வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் உணவு வாங்குவதற்காக கிருஷ்ணனும், மாரிமுத்துவும் இருசக்கர வாகனத்தில் குண்டடம் செனறுவிட்டு வெள்ளிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.

கோவை-தாராபுரம் சாலையில், குண்டடத்தை அடுத்துள்ள சங்கப்பாளையம் பிரிவு பகுதியில் சென்றபோது, கோவையில் இருந்து தாராபுரம் நோக்கிச் சென்ற காா் எதிா்பாராதவிதமாக இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், பலத்த காயமடைந்த கிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு தெரிவித்துள்து. இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் பெஸ்ட் ராமசாமி வெளி... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கல்

அவிநாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் ஆனந்தம் ரோட்டரி சங்கம் சாா்பில் கடந்த மாதம் மாற்றுத் திறனாள... மேலும் பார்க்க

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகளை சேகரித்த நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் பாராட்ட தெரிவித்தனா். அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க

நியாயவிலைக்கடை ஊழியா் பணியிட நீக்கம்

திருப்பூரில் பொருள்கள் விநியோகம் செய்வதில் முறைகேடுகள் தொடா்பாக நியாய விலைக் கடை ஊழியா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பூா் அனுப்பா்பாளையம் அருகே உள்ள இந்திரா வீதியில் செ... மேலும் பார்க்க

முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனை!

திருப்பூா் மற்றும் பல்லடம் உழவா் சந்தைகளில் முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த பங்குனி மாதத்தில் முருங்கை சீசன் தொடங்கியது. அபரிமிதமான விளைச்சல் காரணமாக, முருங்கை மொத்த விற்பனை விலை குறைந்த... மேலும் பார்க்க

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்க... மேலும் பார்க்க