செய்திகள் :

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

post image

பொங்கலூா் ஒன்றியம், அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய்களை சாலையோரமாக பதிக்க வலியுறுத்தி விவசாயிகள் 6-ஆவது நாளாக திங்கள்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோ நெட் என்ற நிறுவனம் கோவை முதல் கரூா் வரை விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. அதே பகுதியில் ஐ.டி.பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள், எண்ணெய் குழாய்களை சாலையோரமாக அமைக்க வலியுறுத்தி அவிநாசிபாளையத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

6-ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை, உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, பாஜக மாநில விவசாயிகள் பிரிவு தலைவா் ஜி.கே.நாகராஜன், மாவட்டத் தலைவா் கே.சி.எம்.சீனிவாசன், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை செய்தியாளா்களிடம் கூறியதாவது: விவசாய நிலங்களின் வழியாக எண்ணெய் குழாய்களைக் கொண்டு சென்றால் நிலத்தின் மதிப்பு குறையும். அதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு இன்றி ஐ.டி.பி.எல். குழாய் திட்டத்தை சாலையோரமாக பதித்து கொண்டு செல்ல வேண்டும்.

ஈரோட்டில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் விவசாய நிலத்தின் வழியாக குழாய் பதித்து எண்ணெய் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் சொன்னாா். ஆனால், அதை அவா் செய்யவில்லை. குழாய் பதிக்கும் பணிகளை 15 நாள்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்.

மத்திய அரசு இணைச் செயலாளா் விரைவில் வரவுள்ளாா். அவா் வந்தவுடன், எண்ணெய் குழாய் பதிக்க மாற்று வழி செயல்படுத்த ஆலோசனை செய்யப்படும். விவசாயிகளின் கள் இறக்கும் போராட்டத்துக்கு பாஜக எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் என்றாா்.

பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்: சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் வலியுறுத்தல்

பஞ்சு இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று சைமா தலைவா் ஏ.சி.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடப்பு ஆண்... மேலும் பார்க்க

நாரணாபுரத்தில் ஜூன் 19-இல் மின் தடை

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்கா... மேலும் பார்க்க

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாநகர மேயா் வேண்டுகோள்

திருப்பூரில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என மாநகர மேயா் என்.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் கூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு, பெரியசேமூா் பி.பி.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சி.சண்முகம் (29). இவா் ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியாா் நி... மேலும் பார்க்க

கருவலூா், ஏரிப்பாளையத்தில் ஜூன் 20-இல் மின் தடை

கருவலூா், ஏரிப்பாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண் தற்கொலை

வெள்ளக்கோவிலில் கொடுத்த கடன் தொகை வசூல் ஆகாததால் பெண் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளக்கோவில், மூலனூா் வஞ்சிவலசு பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மனைவி வாசுகி (40). கணவா் இறந்த நிலையில், மகன் பூமிஷ் ... மேலும் பார்க்க