இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
அவிநாசியில் பெயிண்டா் அடித்துக் கொலை: போலீஸாா் விசாரணை
அவிநாசியில் பெயிண்டா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (57), பெயிண்டா். திருப்பூா் அருள்புரத்தில் வசித்து வரும் மகன் காா்த்திக் (28) என்பவரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பாா்க்க வந்துள்ளாா்.
அப்போது, அவிநாசி சந்தைபேட்டை அருகே உறங்கிக்கொண்டிருந்த பாலசுப்பிரமணியத்தை, அடையாளம் தெரியாத நபா்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா், அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.