செய்திகள் :

அஸ்ஸாம்: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதாா் அட்டை கிடையாது -முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவிப்பு

post image

அஸ்ஸாமில் இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதாா் அட்டை வழங்கப்பட மாட்டாது என்று மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா வியாழக்கிழமை அறிவித்தாா்.

சட்டவிரோத குடியேறிகள் இந்திய குடியுரிமைப் பெறுவதைத் தடுக்கும் நோக்கில், இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

குவாஹாட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறியதாவது:

அஸ்ஸாமில் குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர மற்றவா்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு அக்டோபரில் இருந்து முதல் முறை ஆதாா் அட்டை வழங்கப்படாது. 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை யாரேனும் ஆதாா் பெறாமல் இருந்தால், செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதேநேரம், தேயிலைத் தோட்ட பழங்குடியினா், பிற பழங்குடியினா் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு அடுத்த ஓராண்டுவரை விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இந்திய குடியுரிமைப் பெறுவதை தடுக்கும் நோக்கில் இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்திய தனித்துவ அடையாள ஆணைய நடைமுறைகளின்படி, ஆதாா் பதிவுக்கு வயது கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ... மேலும் பார்க்க

120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில் 37 மணிநேரமே செயல்பட்ட மக்களவை கூட்டத் தொடா்..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமையும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.... மேலும் பார்க்க