செய்திகள் :

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரானார் கெளரவ் கோகோய்!

post image

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் கெளரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, அஸ்ஸாம் மாநில செயல் தலைவர்களாக ஜாகின் உசேன் சிக்தார், ரோசனிலா டிர்கே மற்றும் பிரதீப் சர்கார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

’’அஸ்ஸாம் மாநிலத்துக்கான தலைவர் மற்றும் செயல் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். இதன்படி, மாநிலத் தலைவராக கெளரவ் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

செயல் தலைவர்களாக ஜாகின் உசேன் சிக்தார், ரோசனிலா டிர்கே மற்றும் பிரதீப் சர்கார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் மாநிலத் தலைவராக சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த பூபென் குமார் போராவை கட்சித் தலைமை பாராட்டுகிறது. ரோசனிலா டிர்கே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆன்லைனில் எதிர்மறை விமர்சனத்தை பதிவிட்டவருக்கு ரூ. 16 லட்சம் அபராதம்!

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க