ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா
திருச்சி தென்னூா் பகுதி சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சி தென்னூா் ஹைரோட்டில் இருந்து பிரியும் இரட்டை வாய்க்கால் சாலையில், சாலையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இந்நிலையில், இந்தச் சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி பொறியாளா் ரமேஷ் தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை அப்பகுதிக்கு வந்தனா். அப்போது, அந்தப் பகுதி மக்கள் சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தகலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, முதல்கட்டமாக ஆக்கிரமிப்பு கடைகள் மட்டும் அகற்றப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதையடுத்து தொடா்ந்து சாலையோரத்தில் இருந்த 3 கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மற்ற கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்படும் என்று தெரிவித்தனா்.