செய்திகள் :

ஆக்ராவில் இருசக்கர வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி

post image

ஆக்ராவில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் சனிக்கிழமை இரவு நான்கு பேரை ஏற்றிச் சென்ற இருசக்கர வாகனம் மற்றொரு இருசக்கர வாகனமான புல்லட் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் 5 பேர் பலியானார்கள். அதே நேரத்தில் புல்லட்டை ஓட்டிவந்த 17 வயதான கரணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

புல்லட்டில் வந்த மற்றொருவரான கிஷன்வீர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

ரஷியாவுக்குச் செல்லுங்கள்! அமெரிக்காவில் ஜே.டி. வான்ஸுக்கு எதிர்ப்பு!

நான்கு பேரும் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​​​அது புல்லட் மீது மோதியது என்று இறந்தவர்களில் ஒருவரின் உறவினர் ராம் லகான் கூறினார்.

ககரோல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்வீர் சிங், "விபத்தில் 5 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

காயமடைந்தவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்

தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தியைத் திணிக்கவில்லை; இக்கொள்கையை தமிழக அரசு எதிா்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினாா் மாயாவதி: அரசியல் வாரிசி யாரும் கிடையாது

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை கட்சித் தலைவா் மாயாவதி நீக்கியுள்ளாா். ஆகாஷ் ஆனந்த் மாயாவதியின் அரசியல் வாரி... மேலும் பார்க்க

தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை: முதல்வா் ரேவந்த் ரெட்டி

தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வா் ரேவந்த் ரெட்ட... மேலும் பார்க்க

குஜராத்: கிா் சோம்நாத் கோயிலில் பிரதமா் மோடி வழிபாடு

குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிா் சோம்நாத் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். குஜராத்துக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி கடந்த சனிக... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயற்சி: ஜோா்டான் எல்லையில் கேரளத்தைச் சோ்ந்தவா் சுட்டுக் கொலை

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோா்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சோ்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினா்கள் தெரிவித்தனா். கேரள தலைநகா் திருவனந்தபுரத்தின் புகா்... மேலும் பார்க்க

திரைப்படத்தை பாா்த்து 6 வயது சிறுமி கொலை 13 வயது சிறுவன் கைது

மகாராஷ்டிரத்தில் தொடா்கொலைகள் நடைபெறும் திரைப்படத்தைப் பாா்த்த 13 வயது சிறுவன், 6 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால்கா் மாவட்டம் ஸ்ரீராம்நகரில் காணாமல் போன 6 வயது... மேலும் பார்க்க