செய்திகள் :

ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை! சூர்ய குமார்

post image

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நேற்றிரவு மோதிய இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி கைகளால் கோப்பையை வாங்க இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் கோப்பையை இந்திய அணிக்கு வழங்காமல் நிர்வாகத்தினர் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, கோப்பை இல்லாமல் வெற்றியை இந்திய வீரர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுடன் சூர்ய குமார் யாதவ் பேசியதாவது:

“நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதிலிருந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்படாததை நான் பார்த்ததில்லை. இதனால் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. கூடுதல் மகிழ்ச்சியுடனே மேடையில் வெற்றியைக் கொண்டாடினோம்.

நக்வியிடமிருந்து கோப்பையைப் பெறுவதில்லை என்ற முடிவு வீரர்களால் எடுக்கப்பட்டது, நிர்வாகிகளால் அல்ல. என்னுடைய கோப்பைகள் ஓய்வறையில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளன. எனது அணியின் 14 வீரர்களும் பயிற்சியாளர்களுமே எனது கோப்பைகள்.

ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் நான் பெற்ற போட்டி சம்பளத்தை இந்திய ராணுவத்துக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சூர்ய குமார், போட்டிகளின் சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக அளிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Surya Kumar donates his Asian cup salary to the Indian Army

இதையும் படிக்க : பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

அறிவுறுத்துவதை பின்பற்றுகிறார் சூர்ய குமார்; கிரிக்கெட்டுதான் அவமரியாதை! பாகிஸ்தான் கேப்டன்

இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவின் செயல்களால் எங்களுக்கு அல்ல, கிரிக்கெட்டுக்குதான் அவமரியாதை என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைச்சர் கையில் கோப்பை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிம் கைகளில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க முடியாது என இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். இதனால், அந்தக் கோப்பையை ஆசியக் கோப்பை நிர்வாகம் மீண்டும் எடுத்துச் செ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது!

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி ஆசியக் கோப்பை வென்றதைப் பற்றி... ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்த... மேலும் பார்க்க

166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்! அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்டுகள்!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடி இந்திய வீரர் ராகுல் சஹார், 166 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்க... மேலும் பார்க்க

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வ... மேலும் பார்க்க

பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு!

பிசிசிஐ-ன் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பிசிசிஐ-ன் வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (செப்டம்பர் 28) மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ... மேலும் பார்க்க