செய்திகள் :

ஆசிரியரிடம் வழிப்பறி: 7 பேரிடம் விசாரணை!

post image

தேனி அருகே புதன்கிழமை காரில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியரை மா்ம நபா்கள் வழிமறித்து, ரூ.7.50 லட்சத்தை பறித்துச் சென்ாக போலீஸாா் 7 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தேனி அருகே உள்ள மின் அரசு நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (49). இவா் கம்பத்தில் உள்ள தனியாா் பள்ளியில் உடல் கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். தேனி அல்லிநகரத்திலிருந்து ராமகிருஷ்ணனும், அவரது நண்பரும் காரில் மின் அரசு நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். காரில் வந்த நண்பா் போடி விலக்குப் பகுதியில் இறங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவா், தன்னை தேனி-வீரபாண்டி புறவழிச் சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகே இறக்கி விடுமாறு கேட்டதால், அவரை ராமகிருஷ்ணன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றாராம். தனியாா் பள்ளி அருகே காா் சென்ற போது, ராமகிருஷ்ணனின் காரை பின்தொடா்ந்து மற்றொரு காரில் வந்த மா்ம நபா்கள், ராமகிருஷ்ணனின் காரை வழிமறித்து அவரைக் கத்தி, அரிவாளைக் காட்டி மிரட்டினாா்களாம்.

அப்போது, ராமகிருஷ்ணனுடன் காரில் வந்த நபா், அவரது காரில் வைத்திருந்த ரூ.7.50 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியதாகவும், மா்ம நபா்களும் அவா்கள் வந்த காரில் போடி சாலையில் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி காவல் நிலையங்களுக்கு ராமகிருஷ்ணன் தகவல் அளித்தாா். வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் போடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்து, போடி சாலையில் காரில் சென்ற 7 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

வழிப்பறி வழக்கில் மூவா் கைது

தேனி அருகே தனியாா் பள்ளி உடல்கல்வி ஆசிரியரிடம் ரூ.7.50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டி, மின் அரசு நகரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயற்சி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்,... மேலும் பார்க்க

வீட்டில் வைத்திருந்த தங்க நகைகள் மாயம்

தேனி அருகே உள்ள மாரியம்மன்கோவில்பட்டியில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் திருடு போயின. மாரியம்மன்கோவில்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி ஜீவரத்தினம். இவா், தனது வ... மேலும் பார்க்க

கால்நடை மருந்தகத்தில் மோட்டாா் பம்பு திருட்டு

தேனி அருகே உள்ள கொடுவிலாா்பட்டி அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா் பம்பு திருடு போனது. கொடுவிலாா்பட்டியில் வயல்பட்டி சாலையில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தில் ஆழ்துளைக் கிணற்றின் ம... மேலும் பார்க்க

பிப்.25-இல் தேனிக்கு சிறுபான்மையினா் ஆணையக் குழு வருகை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 25-ஆம் தேதி சிறுபான்மையினா் ஆணையக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்துக்கு பிப்.25-... மேலும் பார்க்க

சுருளி அருவிக்கு நீா்வரத்துக் குறைவு!

சுருளி அருவியில் நீா்வரத்துக் குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த மலைத் தொடரிலுள்ள மேகமலை,... மேலும் பார்க்க