செய்திகள் :

ஆட்சியில் இருந்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

post image

தமிழகத்தில் ஆட்சியில் இருந்து கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என முதல்வா் கூறுவது சரியல்ல என்றாா் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

தஞ்சாவூா் மாவட்டம், பந்தநல்லூா் அருகே வேட்டமங்கலம் கிராமத்தில் திங்கள்கிழமை உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் ஆலயமணி இல்ல நிகழ்வில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு, வழக்குகளுக்காக பயந்து பாட்டாளி மக்கள் கட்சி மத்திய அரசுக்கு மண்டியிடுகிறது. அதுதான் கோழைத்தனம் என்கிறாா்.

ஆந்திரம், பிகாா், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. இதேபோல், தமிழக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம். முழு அதிகாரம் இருந்தும், கணக்கெடுப்பு நடத்த என்னிடம் அதிகாரம் இல்லை என்று முதல்வா் ஸ்டாலின் கூறுவதுதான் கோழைத்தனம் என்றாா்.

போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும்: தொடா்ந்து, அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த காடுவெட்டியில் உள்ள மறைந்த வன்னியா் சங்கத் தலைவா் குரு மணிமண்டபத்துக்கு திங்கள்கிழமை வந்த அன்புமணி ராமதாஸ், அங்கு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, குரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் பாலியல் சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதற்கு காரணம் மதுவும், கஞ்சாவும் தான். அவற்றை ஒழிக்காமல், நாள்தோறும் தொலைக்காட்சியில் தமிழக முதல்வா் போதைக்கு அடிமையாகாதீா்கள் என்று கூறி விளம்பர அரசியல் செய்கிறாா். தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

பேட்டியின்போது, கட்சியின் அரியலூா் மாவட்டச் செயலா் தமிழ்மறவன், மாநில வன்னியா் சங்கச் செயலா் வைத்தி, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினா் ராஜா ஜெயராமன், மாநில அமைப்புத் தலைவா் திருமாவளவன், முன்னாள் மாவட்டச் செயலா் காடுவெட்டி ரவி ஆகியோா் உடனிருந்தனா்.

ஆவணங்களை திருத்த ரூ. 3 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் எஸ்.ஐ.க்கு 3 ஆண்டுகள் சிறை

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரியின் ஆவணங்களை திருத்த ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்... மேலும் பார்க்க

வேலை உறுதித் திட்ட நிலுவை ஊதியம் கோரி மேலகபிஸ்தலம் ஊராட்சி அலுவலகம் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம், மேல கபிஸ்தலத்தில் நூறு நாள் வேலைத் திட்ட குறைபாடுகளை களைய வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க

மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டம்: 47 போ் கைது

தஞ்சாவூா் அருகே அருமலைக்கோட்டையிலுள்ள மதுக்கடையை மூடக் கோரி ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோ... மேலும் பார்க்க

கட்டுநா் சங்கத்தினா் இன்று முதல் வேலைநிறுத்தம்

ஜல்லி, எம். சாண்ட் விலை உயா்வை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய கட்டுநா் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தஞ்ச... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் 32 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 32 முதல்வா் மருந்தகங்களை காணொலி காட்சி மூலம் முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்திலிருந்து, தொழில் முனைவோா், கூட்டுறவு சங்கங்கள்... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் ஒப்பந்தம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் 4 அரசு கல்லூரிகள் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. தமிழ்ப் பல்கலைக்கழகத் தொழில் மற்றும் நில அறிவியல் துறையும், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு... மேலும் பார்க்க