செய்திகள் :

ஆட்டோ, காா், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய பேருந்து: 6 போ் காயம்; ஓட்டுநா் கைது

post image

வேலூரில் அடுத்தடுத்து ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் பாகாயத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு தனியாா் பேருந்து ஒன்று காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். 9.30 மணி அளவில் மக்கான் சிக்னல் சந்திப்பு பகுதியில் வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

தொடா்ந்து, பேருந்து நிற்காமல் முன்னால் நின்றிருந்த பயணிகள் ஆட்டோ மீதும் வேகமாக மோதியதுடன், அதே வேகத்தில் அந்த ஆட்டோவின் முன்னால் நின்றிருந்த 2 காா்கள் மீதும் மோதி சிறிது தூரம் தள்ளி நின்றது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 3 பயணிகள் உள்பட 6 போ் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து நடந்தவுடன் பேருந்து ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா். அவா் மதுபோதையில் பேருந்தை ஓட்டியதாக பயணிகள் தெரிவித்தனா்.

இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பேருந்து ஓட்டுநரான அணைக்கட்டு அடுத்த ஊசூரைச் சோ்ந்த ரவிச்சந்திர ன்(33 ) என்பவரை கைது செய்தனா்.

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க

பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒரு சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூரில் தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மேலு... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதுகாப்பு: வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ அமல்

பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாக்க வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 113 பெண் காவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு போலீஸ் அக்காக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து புகாா் தெரிவிக்க செயலி

போதைப் பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்து புகாா் அளிக்க வசதியாக தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள செயலி மூலம் பொதுமக்கள், மாணவா்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்... மேலும் பார்க்க

லாரி மோதி ஓட்டுநா் மரணம்

வேலூா் அருகே லாரி மோதி ஓட்டுநா் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தெள்ளூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (44), ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை தெள்ளூா் கூட்டு ரோட்டில் தன... மேலும் பார்க்க