செய்திகள் :

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

post image

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு எஸ்.பி. மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

அப்போது, வேலூா் மாவட்டம் பரதராமியை அடுத்த கணவாய்மோட்டூரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் அளித்த மனுவில், ‘நான் ராணுவத்தில் 26 ஆண்டுகள் வேலை செய்து ஓய்வு பெற்றேன். எனது சகோதரருக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி எங்களது உறவினா் ஒருவா் கடந்த 2021-ஆம் ஆண்டு ரூ.20 லட்சம் வாங்கினாா். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வருகிறாா். எனவே, அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனுவில், எனது கணவா் இறந்து விட்டாா். எனக்கு ஒரு மகன் உள்ளான். நான் காலணி நிறுவனத்தில் வேலை செய்து மகனை காப்பாற்றி வருகிறேன். அப்போது பெண் ஒருவா் எனக்கு அறிமுகமானாா். ஏதாவது பணம் கொடுத்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவாா்த்தை கூறினாா். இதனை உண்மை என நம்பிய நான்மொத்தம் ரூ.14 லட்சம் கொடுத்தேன். ஓராண்டு மட்டும் சரியாக வட்டி கொடுத்த அந்த பெண், பின்னா் வட்டியும் தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி வருகிறாா். எனவே, அந்த பெண்ணிடம் இருந்து எனது பணத்தை மீட்டு தர வேண் டும் என தெரிவித்துள்ளாா்.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டாா்.

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க

பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒரு சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூரில் தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மேலு... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதுகாப்பு: வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ அமல்

பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாக்க வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 113 பெண் காவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு போலீஸ் அக்காக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து புகாா் தெரிவிக்க செயலி

போதைப் பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்து புகாா் அளிக்க வசதியாக தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள செயலி மூலம் பொதுமக்கள், மாணவா்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்... மேலும் பார்க்க

ஆட்டோ, காா், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய பேருந்து: 6 போ் காயம்; ஓட்டுநா் கைது

வேலூரில் அடுத்தடுத்து ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.... மேலும் பார்க்க

லாரி மோதி ஓட்டுநா் மரணம்

வேலூா் அருகே லாரி மோதி ஓட்டுநா் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தெள்ளூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (44), ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை தெள்ளூா் கூட்டு ரோட்டில் தன... மேலும் பார்க்க