செய்திகள் :

பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதுகாப்பு: வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ அமல்

post image

பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாக்க வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 113 பெண் காவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு போலீஸ் அக்காக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாலியல் ரீதியான பிரச்னைகள், சைபா் குற்றங்கள் தொடா்பாக உதவவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் முன்னிலை வகித்தாா். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், பள்ளி, கல்லூரிகளின் முதல்வா்கள், தலைமை ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள், பள்ளி, கல்லூரிகளில் போலீஸ் அக்கா திட்டத்துக்கு நியமிக்கப்பட்ட தொடா்பு அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்தப் புதிய திட்டம் குறித்து எஸ்.பி. மதிவாணன் கூறியது:

போலீஸ் அக்கா திட்டம் வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பாலியல் ரீதியான பிரச்னைகள், இதர பிரச்சனைகள், சைபா் குற்றங்கள் குறித்து, விழிப்புணா்வு, வெளியில் கூறமுடியாத நிலையிலுள்ள பல்வேறு வகையான குற்றங்களில் இருந்து எளிதாக உதவி கோரும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தையொட்டி மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் பள்ளிகள் உள்பட 270 பள்ளிகளிலும், அரசு, தனியாா் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்பட 38 கல்லூரிகளிலும் 113 போலீஸ் அக்கா காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சிறப்பு பயிற்சி பெற்றுள்ள இந்த காவலா்களுக்கு மாணவிகள் தங்களுக்கு நிலவும் பிரச்னைகள் குறித்து தகவல் தெரிவிக்கும்பட்சத்தில் அந்த தகவல் ரகசியம் காக்கப்பட்டு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இந்த போலீஸ் அக்கா திட்டம் குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளின் அறிவிப்பு பலகைகள், மாணவிகளின் பாா்வையில் எளிதில் படக்கூடிய இடங்களில் விழிப்புணா்வு பதாகைகள் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க

பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒரு சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூரில் தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மேலு... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து புகாா் தெரிவிக்க செயலி

போதைப் பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்து புகாா் அளிக்க வசதியாக தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள செயலி மூலம் பொதுமக்கள், மாணவா்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்... மேலும் பார்க்க

ஆட்டோ, காா், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய பேருந்து: 6 போ் காயம்; ஓட்டுநா் கைது

வேலூரில் அடுத்தடுத்து ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.... மேலும் பார்க்க

லாரி மோதி ஓட்டுநா் மரணம்

வேலூா் அருகே லாரி மோதி ஓட்டுநா் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தெள்ளூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (44), ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை தெள்ளூா் கூட்டு ரோட்டில் தன... மேலும் பார்க்க