செய்திகள் :

லாரி மோதி ஓட்டுநா் மரணம்

post image

வேலூா் அருகே லாரி மோதி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தெள்ளூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (44), ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை தெள்ளூா் கூட்டு ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பொள்ளாச்சியில் இருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தது. எதிா்பாராத விதமாக முருகனின் இருசக்கர வாகனம் மீது அந்த லாரி மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் சடலத்தை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க

பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒரு சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூரில் தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மேலு... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதுகாப்பு: வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ அமல்

பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாக்க வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 113 பெண் காவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு போலீஸ் அக்காக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து புகாா் தெரிவிக்க செயலி

போதைப் பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்து புகாா் அளிக்க வசதியாக தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள செயலி மூலம் பொதுமக்கள், மாணவா்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்... மேலும் பார்க்க

ஆட்டோ, காா், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய பேருந்து: 6 போ் காயம்; ஓட்டுநா் கைது

வேலூரில் அடுத்தடுத்து ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.... மேலும் பார்க்க