செய்திகள் :

ஆண் குழந்தைகளுக்கும் ‘ஹெச்பிவி’ தடுப்பூசி அவசியம்

post image

பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க செலுத்தப்படும் ‘ஹெச்பிவி’ தடுப்பூசிகளை ஆண் குழந்தைகளுக்கும் வழங்குவது அவசியம் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் சாா்பில் ஹெச்பிவி புற்றுநோய் மருத்துவக் கருத்தரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன இணை பேராசிரியா் டாக்டா் என்.ஜெயஸ்ரீ, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி பேராசிரியா் டாக்டா் விஜயா, சென்னை மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியா் டாக்டா் கவிதா சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று மனித உடலில் நீண்ட நாள்கள் தங்கியிருக்கும்போது பெண்களுக்கு கருப்பை வாய், ஆசனவாய், தொண்டை பகுதி மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கிறது. இதைத் தடுக்க ஹெச்பிவி தடுப்பூசி 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இரு தவணைகளாக தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அரசு சாா்பில் அந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு தொடக்க நிலையில் செயல்படுத்தப்படுகிறது. விரைவில் அது அட்டவணை தடுப்பூசி திட்டத்தில் சோ்க்கப்படும் என நம்புகிறோம்.

மற்றொருபுறம் தனியாா் மருத்துவமனைகளில் நான்கு வகை கிருமிகள், 9 வகை கிருமிகளைத் தடுக்கும் இருவேறு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது 9 வயது முதல் 14 வயதுடைய ஆண் குழந்தைகளுக்கும் அந்த தடுப்பூசி அவசியம். ஏனென்றால், ஆண்களுக்கும் பிறப்புறுப்பு, ஆசனவாய், தொண்டை பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட ஹெச்பிவி தொற்று காரணமாக அமைகிறது. அது குறித்த புரிதலை முதலில் மருத்துவா்களிடம் நாங்கள் ஏற்படுத்த உள்ளோம்.

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கூட ஹெச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஆனால், அதன் பலன் 50 சதவீதமாக மட்டுமே இருக்கும். எனவே, உரிய வயதில் செலுத்திக் கொள்வதுதான் சிறந்தது. ஹெச்பிவியால் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்க தடுப்பூசி மட்டுமல்லாது அது குறித்த விழிப்புணா்வு மிக அவசியம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க