செய்திகள் :

'ஆபரேஷன் சிந்தூர் குறித்து...' - பாஜக முதல்வர்களுக்கு மோடி கண்டிஷன்

post image

டெல்லியில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக கூட்டணியில் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பிற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய மோடி, முக்கியமாக, ஆபரேஷன் சிந்தூர் குறித்து முன் தயாரிப்பு இல்லாமல் எந்தக் கருத்தையும் பேசாதீர்கள் என்றும், தேவையில்லாமல் எதைக் குறித்துமே கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கி உள்ளார்.

பாஜக, பாஜக கூட்டணி முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி
பாஜக, பாஜக கூட்டணி முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி

அமைச்சர் விஜய் ஷா

மத்திய பிரதேசம் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சர் விஜய் ஷா. அவர் சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியிருந்தார். அதில் கர்னல் சோபியா குரேஷியை "பாகிஸ்தானின் சகோதரியை வைத்தே பதிலடி நடத்தி உள்ளோம்" என்று பேசினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்ப, உச்ச நீதிமன்றம் இவரது பேச்சைக் கடுமையாகக் கண்டித்தது.

எம்.பி ராம் சந்தர் ஜங்கரா

பாஜகவின் ராஜ்யசபா எம்.பி ராம் சந்தர் ஜங்ரா பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து பேசும்போது...

"பஹல்காமில் கணவனை இழந்த பெண்களுக்கு போர் குணம் இருக்கவில்லை. அங்கே இறந்தவர்களின் கை கட்டுப்பட்டு இருந்ததால், தீவிரவாதிகள் அவர்களை விட்டு வைக்கவில்லை. இறந்தவர்களுக்கு கைகள் கட்டுப்போட்டு இருந்தது. அவர்கள் (அக்னிவீர்) திட்டத்தில், பயிற்சி பெற்றிருந்தால், அந்த 26 பேரை தீவிரவாதிகள் கொன்றிருக்க மாட்டார்கள்" என்று கூறியிருந்தார்.

இதுவும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த மாதிரி தேவையில்லாத கருத்துகளை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என்று தான் மோடி நேற்று நடந்த சந்திப்பில் அறிவுறுத்தி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

`3 அடி இலையில் 13 வகை அசைவ உணவு' - திமுக பொதுக்குழு கூட்டத்தின் விருந்து | Photo Album

பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொ... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக விஜய் பேசினாரா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பொதுக்குழுவில் அதிமுக குறித்து தீர்மானம் நிறைவேற்... மேலும் பார்க்க

``தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" - சி.பி ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதை முதல் வேலையாக வைத்... மேலும் பார்க்க

`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இது... மேலும் பார்க்க

பாமக: அன்புமணி கட்சியை விட்டு நீக்கமா...? - நிறுவனர் ராமதாஸ் அளித்த பதில் என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று( ஜூன் 1) தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திய ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியி... மேலும் பார்க்க

`திமுக பின்னால் ஒளிந்து ராஜ்சபா பதவி.. நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம்' - கமல் மீது வானதி விமர்சனம்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கமல்ஹாசன் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, ராஜ்ய சபா எம்பி... மேலும் பார்க்க