செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூர்: வெளிநாட்டு ஊடகங்களை விமர்சித்த அஜித் தோவல்!

post image

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட வெளிநாட்டு ஊடக நிறுவனங்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.

நிகழ்வில் பேசிய அவர், "ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் வெறும் 23 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் 9 முக்கிய தீவிரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டன. அந்த முகாம்கள் எல்லையில் இருப்பது அல்ல. பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளில் உள்ளவை.

பாகிஸ்தான், இந்தியாவில் நுழைந்து தாக்கியது, அதைச் செய்தது, இதைச் செய்தது என்று பாகிஸ்தான் ஊடகங்களும் வெளிநாட்டு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. அவர்கள் ஒரு சாட்டிலைட் புகைப்படத்தையாவது செய்திகளில் காட்டினார்களா? ஆனால், நாம் பாகிஸ்தானை தாக்கிய ஆதாரங்களை உலகிற்கு காட்டினோம். நாம் ஏற்படுத்திய பல சேதாரங்களை இன்னும் நாம் முழுமையாக வெளியில் சொல்லவில்லை.

இந்தியாவின் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் இன்னும் சரிசெய்யப்படவில்லை.

பாதுகாப்புத் துறைக்காக இந்தியாவில் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. நம்முடைய தொழில்நுட்பத்திற்காக நாம் பெருமைப்பட வேண்டும். சிறந்த கல்வி, தொழில்நுட்பம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது" என்று பேசியுள்ளார்.

NSA Ajit Doval slams the foreign media for their reportage on the operation sindoor, Speaking IIT Madras,

ஒரே அம்பு, இரு இலக்குகள்! மோடிக்கு மட்டும் 75 வயது ஆகவில்லை! - ஜெயராம் ரமேஷ்

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க