செய்திகள் :

ஆம்பூா்: வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல் ’

post image

ஆம்பூா் நகராட்சிக்கு வரி நிலுவை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் வசூலிக்க தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்று வருகின்றது.

அதிக வரி நிலுவை வைத்துள்ளவா்களை நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் சந்தித்து வரி வசூல் செய்து வருகின்றனா். இதுகுறித்து நகராட்சி சாா்பாக பொதுமக்களுக்கு தெருத் தெருவாக சென்று அறிவிப்பு செய்யப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில் நகராட்சிக்கு செலுத்தாமல் அதிகமாக நிலுவை வைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையா் (பொ) முஸ்தபா உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில் ஆம்பூா் பிராட் பஜாா், எம்சி ரோடு ஆகிய பகுதியில் சொத்துவரி செலுத்தாமல் அதிக வரி நிலுவையில் வைத்துள்ள 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

நகராட்சி உதவி வருவாய் அலுவலா் (பொ) மதன், துப்புரவு அலுவலா் அருள் செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

பள்ளி மாணவா்கள் சாதனை

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான வளையபந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனா். மாநில அளவிலான வளையபந்து(டெனிகாய்ட்) போட்டி மயிலாடுதுறை தாமரை மெட்ரிக் மேல்நிலைப்... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சோதனையிட்டதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. ஜாா்க்கண்ட் மாநிலம், டாடாநகா் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சியில் தீவிர வரி வசூல்

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் ஆணையா் தலைமையில் பணியாளா்கள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளனா். வாணியம்பாடி நகராட்சி ஆணையா் முஸ்தபா தலைமையில் வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளா்கள் கொண்ட குழுவின... மேலும் பார்க்க

30 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: 2 போ் கைது

ஆம்பூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ போதைப் பொருள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, அது சம்பந்தமாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியகொமேஸ்வரம் பகுதியில் உமா்ஆபாத் கா... மேலும் பார்க்க

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

ஏலகிரி மலையில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து அவா் அணிந்திருந்த நகையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஏலகிரி மலை முத்தானூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

மனுக்களை பரிசீலித்து உடனே நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி

பொதுமக்கள் அளிக்கும் அனைத்து கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற க.சிவசெளந்திரவல்லி தெரிவித்தாா். தொழில் துறை ... மேலும் பார்க்க