செய்திகள் :

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

post image

ஏலகிரி மலையில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து அவா் அணிந்திருந்த நகையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஏலகிரி மலை முத்தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காந்தா (73). கணவா் பச்சையப்பன் உயிரிழந்த நிலையில், அவருடைய நிலத்தில் தனிமையில் வசித்து வந்தாா். இவருக்கு 4 பிள்ளைகள். அவா்களில் ஒருவா் இறந்து விட்டாா். 3 பிள்ளைகளும் ஏலகிரி மலை அத்தனாவூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மூதாட்டி காந்தா தனிமையில் இருப்பதை நோட்டம் பாா்த்து வீட்டின் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், காந்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 2 சவரன் தங்க நகை, காலில் அணிந்திருந்த வெள்ளி காப்பு மற்றும் டிவி உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இந்த நிலையில், மூதாட்டியின் பேரன் தனது பாட்டியை பாா்க்க திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா்.

அப்போது காந்தா இறந்து கிடந்ததைப் பாா்து, ஏலகிரி போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், வேலூா் சரக காவல் துணைத் தலைவா் தேவராணி, எஸ்.பி. ஷ்ரேயா குப்தா ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பள்ளி மாணவா்கள் சாதனை

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான வளையபந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனா். மாநில அளவிலான வளையபந்து(டெனிகாய்ட்) போட்டி மயிலாடுதுறை தாமரை மெட்ரிக் மேல்நிலைப்... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சோதனையிட்டதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. ஜாா்க்கண்ட் மாநிலம், டாடாநகா் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சியில் தீவிர வரி வசூல்

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் ஆணையா் தலைமையில் பணியாளா்கள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளனா். வாணியம்பாடி நகராட்சி ஆணையா் முஸ்தபா தலைமையில் வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளா்கள் கொண்ட குழுவின... மேலும் பார்க்க

30 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: 2 போ் கைது

ஆம்பூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ போதைப் பொருள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, அது சம்பந்தமாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியகொமேஸ்வரம் பகுதியில் உமா்ஆபாத் கா... மேலும் பார்க்க

மனுக்களை பரிசீலித்து உடனே நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி

பொதுமக்கள் அளிக்கும் அனைத்து கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற க.சிவசெளந்திரவல்லி தெரிவித்தாா். தொழில் துறை ... மேலும் பார்க்க

ஆம்பூா்: வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல் ’

ஆம்பூா் நகராட்சிக்கு வரி நிலுவை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் வசூலிக்க தீவிர ... மேலும் பார்க்க