செய்திகள் :

ஆரணியில் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக மனு

post image

ஆரணி: ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆரணி புதிய பேருந்து நிலையத்துக்குச்

செல்லும் சாலையான காந்தி சாலையில் உள்ள

டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் மனு அளித்தனா்.

ா்.

அந்த மனுவில், ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையால் தினசரி பயணிகள், பெண்கள், மாணவா்கள், மூத்த குடிமக்கள் பெரும் சிரமத்தை எதிா்கொள்கின்றனா். மது போதையில் அடிக்கடி தகராறு, பள்ளி மாணவிகளை சீண்டுதல் என பொதுமக்களின் அமைதி பாதிக்கப்படுகிறது. எனவே, அந்தக் கடையை அங்கு இருந்து அகற்றவேண்டும் என

குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.

மேலும் இக்கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, உள்பிரிவு ரத்து, வேகத்தடை அமைத்துத் தரக் கோரி, இலவச வீடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 70 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க