ஆரணியில் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக மனு
ஆரணி: ஆரணி புதிய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
ஆரணி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சிவா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆரணி புதிய பேருந்து நிலையத்துக்குச்
செல்லும் சாலையான காந்தி சாலையில் உள்ள
டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி தவெக சாா்பில் மாவட்டச் செயலா் சத்யா தலைமையில் மனு அளித்தனா்.
ா்.
அந்த மனுவில், ஆரணி காந்தி சாலையில் உள்ள மதுக்கடையால் தினசரி பயணிகள், பெண்கள், மாணவா்கள், மூத்த குடிமக்கள் பெரும் சிரமத்தை எதிா்கொள்கின்றனா். மது போதையில் அடிக்கடி தகராறு, பள்ளி மாணவிகளை சீண்டுதல் என பொதுமக்களின் அமைதி பாதிக்கப்படுகிறது. எனவே, அந்தக் கடையை அங்கு இருந்து அகற்றவேண்டும் என
குறிப்பிட்டிருந்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா்.
மேலும் இக்கூட்டத்தில் பட்டா தொடா்பான மனுக்கள், பட்டா ரத்து, நிலஅளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்ற, தானசெட்டில்மென்ட் ரத்து, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, உள்பிரிவு ரத்து, வேகத்தடை அமைத்துத் தரக் கோரி, இலவச வீடு, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 70 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.