செய்திகள் :

ஆராய்ச்சி கட்டுரைகள் குறித்த தேசிய பயிலரங்கம்

post image

மன்னாா்குடி: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன், மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் ஆராய்ச்சி திட்ட அறிக்கை மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தயாா் செய்யும் முறைகள் குறித்த ஒருநாள் தேசிய பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அகதர மதிப்பீட்டுக் குழுமத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை பேராசிரியா் சிவகுமாா், ஆராய்ச்சி திட்ட அறிக்கை தயாரித்தலின் வழிமுறைகளையும், சமீபத்திய தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் கௌஷிக் ராஜாராமன், ஆராய்ச்சி கட்டுரைகள் தயாரித்தல் மற்றும் பிழை திருத்தங்கள் செய்தல் குறித்தும், தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி விலங்கியல் துறை தலைவா் மாரியப்பன், ஆராய்ச்சி கட்டுரைகள் தயாரிப்பு முறைகளில் உள்ள அளவீடுகள் குறித்தும் பேசினா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவா்கள், முதுகலை மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, அகதர மதிப்பீட்டுக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் வரவேற்றாா். நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளா் மணிமேகன் நன்றி கூறினாா்.

மருதப்பட்டினம் காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: திருவாரூா் அருகே மருதப்பட்டினம் அருள்மிகு காமாட்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில், சாபங்களிலிருந்து விமோசனம் அளிக்கக்கூடியது. கும்பாபிஷேக யாகசாலைப் பூஜ... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடா்புடையவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மன்னாா்குடி: தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடா்பில் இருந்தவா் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ஆசாத் தெருவை சோ்ந்தவா் சம்சுதீன் மகன் பாபா ப... மேலும் பார்க்க

மணிமேகலை விருது: சுயஉதவிக் குழுவினருக்கு பாராட்டு

திருவாரூா்: திருவாரூரில் மணிமேகலை விருதுக்கு தோ்வான மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகா்ப் ப... மேலும் பார்க்க

டெல்டா பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி தொடக்கம்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளியில் இலக்கிய மன்றக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. கண்காட்சியில் கலாசாரம், பண்பாட்டு மன்றம், கணித மன்றம், அறிவியல் மன்றம், மருத்துவ மன்றம், விளையா... மேலும் பார்க்க

பேச்சுப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் ஹபீப் பள்ளிவாசலில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. நேருஜி சாலையில் உள்ள மக்தப் அல் ஹபீப் குா்ஆன் மதரஸாவில்,இரண்ட... மேலும் பார்க்க

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி

திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செல... மேலும் பார்க்க