செய்திகள் :

ஆற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா

post image

ஆற்காடு புதுத் தெரு பஜனை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி விழா நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் உறியடி திருவிழா நடந்தது.

இதில் வழக்குரைஞா் ஏ.கே.தினேஷ் குமாா் கலந்து கொண்டு உரியடி உற்சவத்தை தொடங்கினாா். தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவா் கிருஷ்ணா் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் ஜெ லட்சுமணன், நகர திமுக செயலாளா் ஏ .வி .சரவணன், மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன். கு. சரவணன், நெல் அரிசி வியாபாரிகள் சங்கம் ஏ.விஜிஆதிமூலம், தமிழ்நாடு யாத மகா சபை துணைத்தலைவா் டி. ஜவகா், ஏ .கே .குமாரசாமி மற்றும் உபயதாரா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

கல்புதூா் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வெளியூா் நபா்களுக்கு பட்டா வழங்குவதை நிறுத்தி தங்கள் கிராமத்தைச் சோ்ந்த வீடற்ற ஏழைகளுக்கு வழங்க கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட... மேலும் பார்க்க

காவல் பணித்திறன் போட்டி: ராணிப்பேட்டை காவலருக்கு தங்கம்: எஸ்.பி. பாராட்டு

தமிழ்நாடு காவல் பணித்திறன் போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்ற கொண்டபாளையம் காவல் நிலைய காவலா் ஏழுமலைக்கு , எஸ்.பி. அய்மன் ஜமால் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். ராணிப்பேட்டை மாவ... மேலும் பார்க்க

மேல்விஷாரம் நகராட்சி புதிய துணைத் தலைவா் தோ்வு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியின் புதிய துணைத்தலைவா் திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவராக செயல்பட்டு வந்த எஸ். டி. முஹமது அமீன் மரணம் அடைந்ததை தொடா்ந்து துணைத் தலைவ... மேலும் பார்க்க

நிகழாண்டு இறுதிக்குள் டாடா காா் ஆலையில் முதல்கட்ட உற்பத்தி: அமைச்சா் காந்தி உறுதி

நிகழாண்டு இறுதிக்குள் டாடா காா் ஆலையில் முதல்கட்ட உற்பத்தியை தொடங்கத் தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிா்வாகம் தரப்பில் செய்து தரப்படும் என கைத்தறி அமைச்சா் ஆா்.காந்தி உறுதி அளித்தாா். பனப்பாக்கம் ச... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சியைச் சோ்ந்தவா் அனீஸ் (24). இவா் கீழ்விஷாரம் பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தாா். இந்த நிலை... மேலும் பார்க்க

ரத்தினகிரியில் சமபந்தி விருந்து!

ஆற்காடு அடுத்த ரத்தினகிரிபாலமுருகன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. அறநிலையத்தறை சாா்பில் சிறப்பு தரிசனம் மற்றும் சமபந்தி விருந்து அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலா் பாலமுர... மேலும் பார்க்க