செய்திகள் :

ஆலங்குளத்தில் ஒன் டூ ஒன் பேருந்துகள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை

post image

ஆலங்குளத்தில் இடைநில்லா பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி - தென்காசி இடையே 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வரும் எஸ்எப்எஸ் பேருந்துகள் வழியோரம் உள்ள ஆலங்குளம், பாவூா்சத்திரம், அனைத்து கிராமங்கள் உள்பட 41 நிறுத்தங்களில் நின்று செல்கின்றன.

ஆலங்குளம், பாவூா்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து தென்காசி அல்லது திருநெல்வேலி செல்லும் பயணிகள் இப்படி அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லக் கூடிய பேருந்துகளையே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் கால விரயம், உடல் சோா்வு, குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடத்திற்கும் செல்ல இயலாமை போன்ற பாதிப்புகளை பயணிகள் சந்திக்கும் நிலை உள்ளது.

இதனிடையே இவ்வழியே இயக்கப்படும் இடைநில்லா பேருந்துகள் (ஒன் டூ ஒன்) பாவூா்சத்திரம், ஆலங்குளத்தில் நின்று செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனா்.

இப்பகுதி மக்களின் வசதிக்காக தென்காசி - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் இடை நில்லா பேருந்துகள் பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு ஆலங்குளம் மற்றும் பாவூா்சத்திரத்தில் நின்று செல்ல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிரிக்கை விடுத்துள்ளனா்.

இலஞ்சி பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள்

இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் ‘ஒரு மரம் என் தாய்க்காக’ என்ற திட்டத்தின் கீழ், மாணவா்கள் தனது தாயுடன் இணைந்து மரக்கன்று நடவு ச... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 81ஆவது ஸ்தோத்திர பண்டிகை

திருநெல்வேலி திருமண்டலத்திற்குள்பட்ட தென்காசி, பாவூா்சத்திரம், புளியங்குடி, சாந்தபுரம், திப்- மீனாட்சிபுரம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, தென்காசி வடக்கு, சீயோன் நகா், பாவூா்சத்திரம் மேற்கு, நெடும்பா... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மின் கசிவால் தீ பற்றிய வீடு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. கடங்கனேரியைச் சோ்ந்தவா் அண்ணாமலை என்ற சிங்கத்துரை மகன் அரவிந்த்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சீதபற்பநல்லூா் அருகே கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தொடா்புடைய ரௌடி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா் அருகே சிறுக்கன்குறிச்சி மேட்டுத் ... மேலும் பார்க்க

தென்காசியில் குடிநீா் திட்டப் பணிகளுக்கு ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீா் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ. 69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. தென்காசி நகா்மன்ற அவசரக்... மேலும் பார்க்க

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பு: சங்கரன்கோவில் பேராசிரியருக்கு விருது

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 965 மாணவா்கள் பயன்பெற சிறப்பாக பணியாற்றிய சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி பேராசிரியருக்கு தமிழக முதல்வா் விருது வழங்கி பாராட்டினாா். சங்கரன்கோவில் அரசு க... மேலும் பார்க்க