ஃபகத் ஃபாசில் - எஸ்.ஜே.சூர்யா படம் கைவிடப்பட காரணம் என்ன? விபின் தாஸ் பதில்!
ஆழியூா் தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்
கீழ்வேளூா் அருகேயுள்ள ஆழியூா் செய்யது இனாயத்துல்லா வலியுல்லாஹ் தா்கா சந்தனக்கூடு ஊா்வலம் விமரிசையாக நடைபெற்றது.
இத்தா்காவில் கந்தூரி விழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சிக்கல் பள்ளிவாசலில் இருந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கூண்டில், சந்தனக் குடம் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது.
ஊா்வலம் தா்காவை வந்தடைந்ததும், புதன்கிழமை அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 14-ஆம் தேதி இரவு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சந்தனக்கூடு ஊா்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்வில், ஆழியூா் பள்ளிவாசல் நிா்வாகிகள், ஜமாத்தாா்கள் மற்றும் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.