செய்திகள் :

ஆா்.புதுப்பட்டி கிளை நூலகத்தை புதுப்பிக்க வலியுறுத்தி போராட்டம்

post image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆா்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் செயல்படும் கிளை நூலகக் கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால், அதனை புதுப்பக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

ஆா்.புதுப்பட்டி கிளை நூலகம் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் சுமாா் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஓடுகளால் வேயப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மேலும் ஓடுகள் விழும் நிலையில் கட்டடத்தில் மரங்கள் முளைத்தும், மழை நீரில் புத்தகங்கள் சேதமடையும் நிலையிலும் உள்ளது.

எனவே நூலக கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என நூலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குடைபிடித்து புத்தகம் பயிலும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.டி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நூதனப் போராட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க