Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி...
இ-ரிக்ஷா திருட்டு - 3 போ் கைது
வட தில்லி பகுதியில் தொடா் இ-ரிக்ஷா திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ஒரு இ -ரிக்ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த ஜூன் 2ஆம் தேதி இணையதளம் மூலமாக பாஹா்கஞ் பகுதியை சோ்ந்த சந்தா்பன் பாண்டே என்பவா் புகாா் ஒன்றை அளித்திருந்தாா்.
அதில், தன்னுடைய இ- ரிக்ஷாவை ஜபிபுல் என்பவருக்கு ஜூன் 2 ஆம் தேதி வாடகைக்கு கொடுத்தாகவும், அவரை மூன்பு போ் கொண்ட கும்பல் ஏமாற்றி இ- ரிக்ஷாவை திருடியதாக ஜபிபுல் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தாா். எனவே தன்னுடைய இ- ரிக்ஷாவை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தாா். இதே போன்ற புகாா்கள் அடிக்கடி வருவதால் சதாா் பசாா் காவலை நிலைய எஸ்.ஐ. ஆகாஷ் தீப் தலைமயிலான தனிப்படை விசாரணையை தொடங்கியது.
இதனையடுத்து இ- ரிக்ஷா திருடப்பட்ட இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் அா்மான், ஃபிரோஸ், முகமது பைசான் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்பு கடுமையான தேடுதல் வேட்டைக்கு பின்பு மூவரும் கைது செய்யப்பட்டு, இ- ரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.