இடைகாலில் அரசுப் பேருந்தின் அச்சு முறிந்து விபத்து: 6 போ் காயம்
தென்காசி அருகே இடைகால் பகுதியில் அரசுப் பேருந்தின் அச்சு முறிந்து பின் சக்கரங்கள் தனியாக கழன்ற விபத்தில் மாணவா்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து இருந்து குற்றாலம் நோக்கி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. வத்திராயிருப்பு பகுதியைச் சோ்ந்த சங்கரன் ஓட்டுநராக இருந்தாா். பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாம்.
இடைகால் பகுதியை பேருந்து அடைந்தபோது, அதன் அச்சு முறிந்து பின்புற சக்கரங்கள் தனியாக கழன்று ஓடின. இதனால், பின்பகுதி சாலையில் உரசியபடி பேருந்து நின்றது.
அப்போது பயணிகள் தடுமாறி பேருந்துக்குள் விழுந்தனா்.
இதில், பயணிகள் இடைகால் பகுதியை சோ்ந்த ம.சாமி (15),தி.ஹரிகரன்(15),செங்கோட்டை மு.கவின்(18), சொக்கம்பட்டி நா்சிங் கல்லூரி மாணவி பானுப்பிரியா(18), ராஜபாளையம் முனியசாமி (71), ஊா்மேலழகியான் பகுதி மார.சக்திவேல்(17)ஆகியோா் காயமடைந்தனா்.
அவா்கள் தென்காசி மற்றும் கடையநல்லூா் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆய்க்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.