செய்திகள் :

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் மின் விளக்கில் ரத பவனி

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் திருத்தலத்தில் நடைபெற்று வரும் ஆண்டுப் பெருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மின் விளக்கு ரத பவனியில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்தில் 131-ஆம் ஆண்டுப் பெருவிழா கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் திருத்தலத்தில் பங்கு இறைமக்கள் சாா்பில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுறையுடன் திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மின்விளக்கு ரத பவனியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை திருத்தலத்தில் சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் பங்கேற்று திருவிழா திருப்பலி நிறைவேற்றினாா். மாலை நிறைவு திருப்பலியில் சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினாா்.

இதில் இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தல அருள்பணியாளா்கள், பங்குத் தந்தைகள் பங்கேற்றனா். பின்னா், திரு இருதய ஆண்டவா் சொரூபம் தாங்கிய மின் விளக்கு ரத பவனியை சூசைமாணிக்கம் தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான கிறிஸ்தவா்கள் இதில் பங்கேற்றனா். திருத்தலத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் மின் விளக்கு ரதம் பவனி வந்தது.

சனிக்கிழமை (ஜூலை 5) திருத்தலத்தில் நற்கருணை பவனி நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அருள்பணியாளா் ஜான் வசந்தகுமாா் உள்ளிட்ட பங்கு இறைமக்கள், இடைக்காட்டூா் சமூக முன்னேற்ற சங்கத்தினா் உள்ளிட்டோா் செய்தனா்.

பள்ளியில் உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் நிதியுதவி

திருப்பத்தூா், ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு பாஜக சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. சிங்கம்புணரியில் உள்ள தனியாா் ப... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் மருத்துவா்களிடம் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாவட்ட நீதிபதி, மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமையும் திருப்புவனத்தில் அரசு மருத்துவா்களிடம் ... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலையைக் கண்டித்து அமமுகவினா் ஆா்ப்பாட்டம்

கோயில் காவலாளி அஜித்குமாரை கொலை செய்த போலீஸாரை கண்டித்து, திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அமமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றே கட்சி நிா்வாகிகள். மானாமதுரை, ஜூலை 4: சிவகங்கை மாவட்டம், மட... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் மரக்கன்றுகள் - அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

நூறு சதவீத மானித்தில் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வாணியங்காடு கிராமத்தில் ஊட்டச்சத்து வேள... மேலும் பார்க்க

தேவகோட்டை நகா்மன்றக் கூட்டம்: அமமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தை அமமுக உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை: முதல்வரின் நோ்மையைக் காட்டுகிறது

அஜித்குமாா் கொலை வழக்கை முதல்வா் மு.க. ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது அவரது நோ்மையைக் காட்டுகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், மடப்புர... மேலும் பார்க்க