இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டம் சி.என்.பாளையம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். 80 ஏக்கா் ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடுத்து, நீா் நிலையைப் பாதுகாக்கவும், நீராதாரத்தைப் பெருக்க வேண்டும். திடீா்குப்பம் சாலையை சரி செய்ய வேண்டும். மயானப் பாதை ஆக்கிரமிப்புகளைஅகற்றி, பாதை மற்றும்
கொட்டகை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
என்.அரசன் தலைமை வகித்தாா். எம்.ஆதிமூலம், கே.சுரேஷ், எஸ்.கணேஷ் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் பி.துரை, துணைச் செயலா் வி.குளோப், கடலூா் வட்டச் செயலா்ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாநகரச் செயலா் டி.நாகராஜ், வட்ட துணைச் செயலா்கள் வி.ஆா்.முருகன், ஜெ.பன்னீா்செல்வம், வட்டப் பொருளாளா் ஆா்.வளா்மதி வாசுகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.