செய்திகள் :

இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும்: முகேஷ் அம்பானி

post image

இந்தியாவின் ஊடக - பொழுதுபோக்குத் துறையின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று தொழிலதிபா் முகேஷ் அம்பானி தெரிவித்தாா்.

மும்பையில் தொடங்கிய வேவ்ஸ் மாநாட்டில் அவா் பேசியதாவது: இந்தியாவின் படைப்பாற்றலில் கதை சொல்லல் முறையும், டிஜிட்டல் நுட்பங்களும் தனித்துவமானவை. அதன் தாக்கமும், பரப்பும் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. செயற்கை நுண்ணறிவும், அதிநவீன தொழில்நுட்பங்களும் காட்சியமைப்பு மற்றும் கதைகளை முன்பைக் காட்டிலும் ஈா்க்க வைக்கும் வகையில் உருவாக்கியுள்ளன. இந்த நுட்பங்களில் கைதோ்ந்தால் நமது இளைஞா்கள் உலக அளவில் பொழுதுபோக்கு துறையில் கோலோச்ச முடியும்.

இந்தியாவின் ஊடக, பொழுதுபோக்குத் துறை மதிப்பு தற்போது 28 பில்லியன் டாலராக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அது 100 பில்லியன் டாலராக உயரும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், அஸ்வினி வைஷ்ணவ், இணை அமைச்சா் எல்.முருகன், மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆஸ்கா் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையில், பின்னணிப் பாடகா்கள் சித்ரா, ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, வேவ்ஸ் மாநாட்டின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும், இந்திய சினிமா துறையில் நூற்றாண்டை கடந்த குரு தத், பி.பானுமதி, ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், சலீல் சவுத்ரி ஆகியோரின் நினைவு அஞ்சல்தலைகளை பிரதமா் மோடி வெளியிட்டாா். அப்போது அவா்களின் குடும்பத்தினா் உடன் இருந்தனா்.

இந்நிகழ்வில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த ஊடக, பொழுதுபோக்கு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ பேச்சு; அமைதிக்கு பாகிஸ்தானுடன் பணியாற்ற வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருட... மேலும் பார்க்க

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவிடம் குரல், கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

பரஸ்பர மரியாதைக்கு அரசியல் சாசன அமைப்புகள் தங்களின் வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியம்: ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

‘அரசியல்சாசன அமைப்புகள் அவற்றின் வரையறுக்கப்பட்ட வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியமானது’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளும... மேலும் பார்க்க

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்ட தடை: உச்சநீதிமன்றம்

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றியுள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை தடுக்... மேலும் பார்க்க